அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவு தொகை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
தற்போது அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 1000 ரூபா தொலைபேசி கொடுப்பனவு அவர்களின் சம்பளத்துடன் இணைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரால் ஒருங்கிணைக்கப்பட்டு, சமூக வலுவூட்டல் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஒப்புதல் கிடைக்கும் வரையான நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், 1000 ரூபா தொலைபேசி கொடுப்பனவை சம்பளத்துடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் வரை, அது செலவுத்தொகை திரும்பச் செலுத்தும் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் ரூ.2,000 மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,000 அலுவலக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அத்துடன் பயண கொடுப்பனவும் வழங்கப்படும்.

அலுவலக முத்திரைகள், எழுதுபொருட்கள் மற்றும் அபிவிருத்தி மன்றக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான செலவுகளுக்காக 10000 ரூபா ஏற்கனவே செலவுத்தொகை திரும்பச் செலுத்தும் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி News Lankasri