தீர்வுக்கான பேச்சு விரைவில் ஆரம்பம்: பிரதமர் தினேஷ் அறிவிப்பு
தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய பிரச்சினைகள் தொடர ஒருபோதும் இடமளிக்க முடியாது.
இன பிரச்சினை
குறுகிய காலத்துக்குள் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
இந்த நிலையில் தேசிய பிரச்சினைகள் நீடித்தால் இன, மத நல்லிணக்கம் ஏற்படாது.
நாட்டில் ஏதோவொரு வகையில் இன ரீதியிலும், மத ரீதியிலும் கருத்து மோதல்கள் உருவாகின்றன.
மக்களிடத்தில் ஏற்படவுள்ள பிளவுகள்
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முற்படுகின்றனர்.
தீர்வு விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம்
விரைவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
