தீர்வுக்கான பேச்சு விரைவில் ஆரம்பம்: பிரதமர் தினேஷ் அறிவிப்பு
தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய பிரச்சினைகள் தொடர ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இன பிரச்சினை
குறுகிய காலத்துக்குள் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
இந்த நிலையில் தேசிய பிரச்சினைகள் நீடித்தால் இன, மத நல்லிணக்கம் ஏற்படாது.
நாட்டில் ஏதோவொரு வகையில் இன ரீதியிலும், மத ரீதியிலும் கருத்து மோதல்கள் உருவாகின்றன.

மக்களிடத்தில் ஏற்படவுள்ள பிளவுகள்
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முற்படுகின்றனர்.
தீர்வு விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம்
விரைவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri