கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய
இலங்கையில் உள்ள முன்னணி கோடிஸ்வர வர்த்தகர்களுடன் அதி முக்கியமான சந்திப்பு ஒன்றை இன்று நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) திட்டமிட்டுள்ளார்.
இதனடிப்படையில், இந்த வர்த்தகர்களுடனான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் உள்ள பிரபலமான வர்த்தகர்களான தம்மிக்க பெரேரா, ஒஷார நாணயக்கார, சுமல் பெரேரா உட்பட 20 முன்னணி வர்த்தகர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டு்ளள பொருளாதார நெருக்கடி சம்பந்தமாகவும், அதனை தீர்ப்பதற்கான வர்த்தகர்களிடம் உள்ள யோசனைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, அவர்களின் யோசனைகளை பகிர்ந்துக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam