பாடசாலை மாணவிகள் தொடர்பில் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை!
நாட்டிலுள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கல்வி அமைச்சு
இந்த கலந்துரையாடல், நேற்று (22) கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில், சுகாதாரத் துவாய் உற்பத்திக்காக இலங்கையில் தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பிரதான 4 கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரிவின் அதிகாரிகள், இலங்கை தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
சுசுகாதார துவாய்கள்
கடந்த வருடம், பாடசாலைகளில் கற்றல்-கற்பித்தல் செயல்முறையை பேணுவதற்கு இன்றியமையாத காரணியான குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு உதவும் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் சுகாதார துவாய் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த சுகாதார திட்டத்தை, பெண் மாணவர்களின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கும், நிதி பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுகாதார அறியாமை காரணமாக கல்வியில் சரியான கவனம் இல்லாதது போன்ற பாதகமான சூழ்நிலைகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தியது.
இதன்மூலம் சுசுகாதார துவாய்களை கொள்வனவு செய்வதற்கு இலவச வவுச்சர் வழங்க அப்போதைய கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri