கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
கிளிநொச்சி இரணைதீவிற்கு அண்மித்த கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, குறித்த கடற்றொழிலாளர்களை நேற்றையதினம்(22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தண்டப்பணம்
இதன்போது, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்திய முதலாவது குற்றச்சாட்டுக்காக, அவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச்சாட்டுக்காக எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 18 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan