சிறுமிக்கு தவறான காணொளிகள் அனுப்பிய சிப்பாய் கைது
பதின்மூன்று வயதுச் சிறுமியொருவரை அச்சுறுத்தி, அவரது தொலைபேசிக்கு தவறான காணொளிகள் அனுப்பிவந்த இராணுவச் சிப்பாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம்(05.01.2025) அநுராதபுரம், தந்திரிமலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியை அச்சுறுத்தி அவரது கைத்தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ள சிப்பாய், தவறான காணொளிகள் மற்றும் குறுந்தகவல்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

தந்திரிமலை இராணுவ முகாமில் பணியாற்றும், பராக்கிரமபுர பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஶ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam