கொழும்பில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்திய நபரொருவர் கைது
பிரதிப் பொலிஸ் மா அதிபராக நடித்து கொழும்பில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு(Colombo) பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் புகைப்படம், பெயர் என்பவற்றைப் பயன்படுத்தி வட்சப் மூலம் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி இவர் கப்பம் பெற்று வந்துள்ளார்.
பொய்யான முறைப்பாடுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக அச்சுறுத்தியே இந்த நபர் கப்பம் பெற்று வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
