பாரிய போதைப் பொருள் கடத்தல் கடற்படையினரால் முறியடிப்பு
200 கிலோ போதைப் பொருளைக் கடத்தி வந்த ஆழ்கடல் கடற்றொழில் படகுகள் இரண்டை கடற்படையினர் கைப்பற்றி உள்ளனர்.
ஆழ்கடல் கடற்றொழில் படகுகள் மூலம் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே கடற்படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கைப்பற்றப்பட்ட படகுகள்
அதனடிப்படையில் கடற்படையினர் ஆழ்கடல் ரோந்து நடவடிக்கை மூலம் குறித்த கடத்தலை மேற்கொண்ட இரண்டு ஆழ்கடல் கடற்றொழில் படகுகளைக் கைப்பற்றி, அதில் இருந்த பத்து பணியாளர்களையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் பணியாளர்கள் தற்போதைக்கு காலி துறைமுகத்தை நோக்கி அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |