பிரித்தானியாவிற்கு பகிரங்கமாக விடுக்கப்பட்டுள்ள சவால்!
சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுக்கு கடத்தல்காரர்கள் சவால் விடுத்துள்ளார்கள்.
பிரித்தானியா 50 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தினால், நாங்கள் 500பேரை புதிதாக பிரித்தானியாவுக்குள் அனுப்புவோம் என கடத்தல்காரர்கள் சவால் விடுத்துள்ளார்கள்.
2023இல் சுமார் 80,000 புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையலாம் என உள்துறை அலுவலக அதிகாரிகள் கணித்துள்ளார்கள்.
பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் 10 படகுகளில் 442 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.
இதேவேளை அதிகாரிகளுக்கு சவால் விடும் கடத்தல்காரர்கள் பிரித்தானிய அதிகாரிகள் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எந்த அளவுக்கு முயற்சி செய்கிறார்களோ, அதே அளவுக்கு கட்டுப்பாடுகளை மீறி புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புவதில் தீவிரமாக செயற்படுகின்றனர்.
சமூக ஊடகங்களில் விளம்பரம்
யாரும் உங்களை பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்ப முடியாது என்று உறுதியாக கூறும் வகையில் கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.
எனவே பிரித்தானிய பிரதமர் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்தும், அதனால் எந்த பயனும் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாக புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
