இலங்கையில் புகைப்பழக்கத்தின் நிலை: வெளியாகியுள்ள புள்ளிவிபரம்
உலகில் புகைப்பழக்கம் குறைந்துவரும் நாடுகளில் இலங்கையின் (Sri Lanka) நிலை சிறந்த நிலையில் காணப்பட்ட போதிலும் 1.5 மில்லியன் இலங்கையர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (Alchohol and Drug Information Centre) குறிப்பிட்டுள்ளது.
தற்போது புகைப்பழக்கத்திலிருந்து விடுதலையாகி வரும் எமது நாட்டின் இளைஞர்களை மீண்டும் அதற்குள் ஈர்த்துக்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதாகவும் குறித்த நிலையம் கூறியுள்ளது.
அத்துடன், இளைஞர்களையும் சிறுவர்களையும் புகைப்பழக்கத்திற்கு தூண்டும் வகையில் சட்டவிரோதமான மற்றும் நெறிமுறையற்ற தந்திரோபாயங்களை புகையிலை நிறுவனம் மேற்கொள்வதாகவும் இதன் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்
இவ்வாறானதொரு பின்னணி இருந்தும் இலங்கையில் புகைப்பழக்கம் பாரியளவில் குறைந்துள்ளதாகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இலங்கையில் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 16 மணி நேரம் முன்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
