வவுனியாவில் 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை
வவுனியாவில் 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார்.
பருவகால மழை, கடந்த வருட இறுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் இந்த வருட ஆரம்பத்தில் பெய்த மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் அவற்றின் நீர் கொள்ளவினை எட்டியுள்ளது.
இதன் காரணமாக கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக அளவினை விட இம்முறை ஐயாயிரம் ஏக்கர் அளவில் மேலதிகமாக சிறுபோகம் நெற் செய்கை மேற்கொள்ளப்டவுள்ளது.
சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள்
அதன்படி, 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan