இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கம்: வெளியான தகவல்
இலங்கை இராணுவத்தின் புலனாய்வு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை நீக்குமாறு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் கடும் போக்கு வாதிகளால் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிநாட்டு செய்தி சேவையான 'செனல் போ' Channel 4 News தேடிய சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டு தயாரித்த நிகழ்ச்சி தொகுப்பை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
'செனல் போ' வெளியிட்ட காணொளி
அந்த காரணங்களை கொண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் நடைபெறுகின்றன. விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்குமாறே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த கோரிக்கை தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri