இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 25 மில்லியன்களாக குறைந்துவிட்டது- ரணில் விக்கிரமசிங்க தகவல்!
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இளம் தொழில் வல்லுநர்களிடம் பேசிய விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே கடந்த வாரத்தில் இந்த கையிருப்பு 50 மில்லியன் டொலர்கள் என்று நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்த நிலையிலேயே ரணிலின் தகவல் வெளியாகியுள்ளது
அரசாங்கம் தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, மக்களுக்கு சாத்தியமான நிவாரணங்களை வழங்க வேண்டும்.
இந்தநிலையில் அரசாங்கம் தனது வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்க நேரிடும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தால் பெறப்பட்ட கடன்களின் நிலுவைக் காரணமாக உள்ளூர் வங்கிகள் வீழ்ச்சியடையும்.
எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிகபட்சம் ஓரிரு வருடங்கள் ஆகும் என்றும் ரணில் கூறினார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri