ரணிலுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது: நாமல் மறைமுகம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையைப் பாதுகாக்கும் ஒருவரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
இந்தக் கூற்றின் மூலம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது என்று நாமல் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என உணர முடிகின்றது.

மேலும், மொட்டுக் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்தவர்கள் தமக்குத் தேவையில்லை என்றும், அவர்களுடன் கூட்டணி ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri