மொட்டு கட்சிக்கான ஆதரவு குறையவில்லை! சாந்த பண்டார
மொட்டு கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69 இலட்ச மக்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
69 இலட்ச மக்களை தங்களது சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்ள எவராலும் முடியாது. அவ்வாறு நினைத்திருந்தால் அவர்களுக்கு அது வெறும் கனவாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிமை கொண்டாடுவதில் ஆர்வம்
அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அந்த மக்களுக்கு உரிமை கொண்டாடுவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கான ஆதரவு குறிப்பிட்டளவு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியினர் வேறு ஓர் தரப்பில் இணைந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam