மொட்டு கட்சிக்கான ஆதரவு குறையவில்லை! சாந்த பண்டார
மொட்டு கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69 இலட்ச மக்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
69 இலட்ச மக்களை தங்களது சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்ள எவராலும் முடியாது. அவ்வாறு நினைத்திருந்தால் அவர்களுக்கு அது வெறும் கனவாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிமை கொண்டாடுவதில் ஆர்வம்
அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அந்த மக்களுக்கு உரிமை கொண்டாடுவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கான ஆதரவு குறிப்பிட்டளவு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியினர் வேறு ஓர் தரப்பில் இணைந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam