குடும்பமாகக் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட கட்சியே மொட்டு: சந்திம வீரக்கொடி
மொட்டுக் கட்சி என்பது ஒரு கட்சியல்ல. அது குடும்பம். குடும்பமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. இனி அதை யாராலும் கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மொட்டுக் கட்சிக்கு இனி யார் தலைவராக வந்தாலும் அந்தக் கட்சியை இனிக் கட்டி எழுப்ப முடியாது. அது கட்சியல்ல ஒரு குடும்பம். ராஜபக்சவின் குடும்பம்.
மக்களின் எதிர்பார்ப்புக்கள்
அந்தக் குடும்பத்தின் இருப்புக்காக அடுத்த அரசியல்வாதிகளை அழித்து பொருளாதாரத்தை நாசமாக்கி மக்களின் எதிர்பார்ப்புக்களை முடிவுக்குக் கொண்டு வந்து குடும்பமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி இது.
யாருக்குத் தலைவர் பதவி கொடுத்தாலும், யாருக்கு அமைச்சுப் பதவிகள் கொடுத்தாலும் இந்தக் கட்சியை இனிக் கட்டியெழுப்ப முடியாது என்பதை ஜனாதிபதி உள்ளிட்ட மொட்டுக் கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.