மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விசேட கவனம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களாக முன்னிறுத்த ஆறு பேர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, தம்மிக்க பெரேரா, மற்றும் மேலும் இருவர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதி தீர்மானம்
எவ்வாறாயினும், இது தொடர்பில் கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவில்லை. மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவே இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
