இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 150 மில்லியன் ரூபா பணப்பரிசு
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 150 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய இந்த பணப் பரிசுத் தொகையை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள்
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண மகளிர் இருபதுக்கு20 போட்டித் தொடரில் இலங்கை அணி பலம்பொருந்திய இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப் போட்டி பரிசளிப்பு நிகழ்வின் போது ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்திருந்தது.
எனினும், தற்பொழுது ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் அல்லது 150 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
