இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
சூப்பர் 4 சுற்றின் 3ஆவது ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (T20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.
பாகிஸ்தான் வெற்றி
சூப்பர் 4 சுற்றின் 3ஆவது ஆட்டம் அபுதாபியில் நேற்று(23) நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து, 134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18 ஓவரில் 5 விக்கெட்டுக்களை 138 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.



