மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு அநுர அரசே காரணம்! சாமர சம்பத் விமர்சனம்
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியே காரணம் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விமர்சித்துள்ளார்.
நேற்றைய(23) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வந்து எங்களிடம் விளக்கம் கூறுகின்றார்கள். ஆனால் அதனால் எந்தப் பலனும் இல்லை.
ஏனெனில் மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியே காரணம். எனவே நீங்கள் எங்களுக்கு பிரச்சினை குறித்து விளக்கமளிப்பதற்குப் பதில் மின்சார சபை ஊழியர்களுடன், தொழிற்சங்கங்களுடன் பேசி பிரச்சினையைத் தீர்க்க முயற்சியுங்கள்.
எதிர்க்கட்சியான எங்களிடம் அதைப் பற்றி பேசி பயனில்லை. நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam