ஜனாதிபதிக்கு வடக்கிலே அதிக ஆதரவு!தென்பகுதியை விரும்பாத தமிழ் மக்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தென்பகுதியை விட வடக்கிலே அதிக ஆதரவு இருப்பதாக அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் செயற்பாட்டாளர்கள்,புத்திஜீவிகளை சந்தித்து நான் கலந்துரையாடியபோது ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு வடக்கில் கிடைத்துள்ள ஆதரவைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.
இதன் காரணத்தால் தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய செயற்திட்டங்கள், கொள்கைகள் எதிரான போக்கில் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்கள் தென்பகுதி மக்களுடன் சேர்ந்து இருக்கு விரும்பவில்லை.மாறாக தமது இடத்திலேயே சாதாரணமாக வாழ ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி