மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் என மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறைக்கப்படும் மின்வெட்டு நேரம்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி திட்டமிட்டபடி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இரவு நேர மின்வெட்டு 1 மணித்தியாலமாக குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2) With the scheduled addition of Unit 3 of Coal Plant to the Grid on 15th of Dec, all Tourism zones identified by the Ministry of Tourism, will be exempted from night power cuts & Islandwide night power cut will be reduced to 1 hour. No power cuts during Christmas & New Year.
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 30, 2022
மேலும், சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் அதன்பின்னர், இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு
இதேவேளை, தென் மாகாணம் மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசெம்பர் 1ஆம் திகதி முதல் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு நடைமுறைப்பபடுத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.