பயங்கரவாத தடைச் சட்டத்தில் புதிய திருத்தங்கள்! அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் : செய்திகளின் தொகுப்பு (Video)
ஐ.நா மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வு நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் பல இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந் நிலையில் இலங்கையில் மிகக் கொடூரமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களின் அடிப்படையில் தடுப்புக் காவல் உத்தரவிற்கு அமைய ஒருவரை தடுத்து வைக்கும் காலம் 18 மாதங்களிலிருந்து12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,