மத்திய மாகாணத்திலும் கால்நடைகளுக்கு தோல் நோய்: கட்டுப்படுத்த நடவடிக்கை(Video)
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்குப் பரவி வரும் தோல் நோய்களைப் போன்று மத்திய மாகாணத்திலும் இந்த நோய் பரவி வருவதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்குக் கால்நடைகளைப் போக்குவரத்துச் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் இந்த கால்நடை நோய் உத்தியோகபூர்வ பிரிவுகளில் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதேச கால்நடை வைத்தியர்கள்
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை மற்றும் கலேவெல கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, நுவரெலியா மாவட்டத்தில் ராகலை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய உடுநுவர குவாட்டல்வ ஆகிய பிரதேசங்களில் கால்நடைகளுக்குத் தோல் நோய் பரவி வருகின்றமை இனங்காணப்பட்டுள்ளதாகப் பிரதேச கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடி சிகிச்சைகள்
எவ்வாறாயினும், இது ஒரு வைரஸ் நோய் என்பதால், நோயைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோய் பதிவாகியுள்ள பிரிவுகளிலிருந்து விலங்குகளை வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகளின் முதுகில் கட்டிகள் தோன்றுவதன் மூலமும் தோல் நோய்த்தொற்றுகள் மூலமும் இந்நோயை அடையாளம் காண முடியும்.
கால்நடைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் மாகாண பணிப்பாளர் ராஜநாயகம் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.







WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
