சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பதாக சஜித் தரப்பு அறிவிப்பு
சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
பிபில மதகம பகுதியில் இன்றைய தினம்(25.07.2023) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பங்கேற்ற கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார் .
மேலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சர்வ கட்சி மாநாடு நாளைய தினம் நடைபெற உள்ளதாக அவர் இதன்போத தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
எனினும் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இந்த சர்வ கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சுனில் ஹதுனத்தி இந்த விடயத்தை ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |