பிளவுபடும் ஐக்கிய மக்கள் சக்தி..! மூத்த உறுப்பினர்களின் முடிவு
கட்சிக்குள் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் கட்சியின் முடிவுகளுடன் உடன்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் சமீபத்தில் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளூராட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே அவர்கள் பதவி விலகியதாக கூறப்படுகின்றது.
அதிகரிக்கும் நெருக்கடி
மேலும், பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவ்பொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் சம்பக விஜேரத்ன, ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் துணை தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹாரே, நுவரெலியா மாவட்ட இணை அழைப்பாளர் அனகிபுர அசோக செபால, காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் ஆகியோர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், உள்ளூராட்சி அமைப்புகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளை நியமிப்பதில் நெருக்கடி அதிகரித்து வருகின்றது.
மேலும் கட்சித் தலைமை எடுத்த முடிவுகளால் பல தொகுதி அமைப்பாளர்கள் வருத்தமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்சி முடிவுகளின்படி செயற்படுவது அனைத்து கட்சி உறுப்பினர்களின் பொறுப்பு என்பதை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri
