முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

Tamils Mullivaikal Remembrance Day Northern Province of Sri Lanka
By Independent Writer May 17, 2024 09:09 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

முள்ளிவாய்க்காலில் (Mullivaikal) 2009ஆம் ஆண்டு மே 18 தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன படுகொலையையிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதிவரை கஞ்சிவாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்று (17.05.2024) வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு யாரும் தடை விதிக்க இயலாது! பாதிக்கப்பட்ட தாயொருவரின் கருத்து

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு யாரும் தடை விதிக்க இயலாது! பாதிக்கப்பட்ட தாயொருவரின் கருத்து

முல்லைத்தீவு

தமிழின படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று (17) முல்லைத்தீவு நகர் பகுதியில் மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Sixth Day Of Mullivaikal Commemoration

இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி - ஷான்

முறிகண்டி 

இந்நிலையில், முறிகண்டியில் மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

sixth-day-of-mullivaikal-commemoration

இந்த நிகழ்வானது முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.

செய்தி - எரிமலை

மட்டக்களப்பு 

பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஆறாவது நாளாகவும் மட்டக்களப்பில் (Batticaloa) முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

sixth-day-of-mullivaikal-commemoration

மட்டக்களப்பின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.

sixth-day-of-mullivaikal-commemoration

செய்தி - குமார்

யாழ்ப்பாணம் 

வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் இன்று வழங்கப்பட்டுள்ளது.

sixth-day-of-mullivaikal-commemoration

மே18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூறும் வகையிலான கஞ்சி வழங்கும் நிகழ்வினை குருநகர் கர்த்தர் ஆலயத்திற்கு முன்பாக வேலன் சுவாமிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

sixth-day-of-mullivaikal-commemoration

இதன்போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், 'இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை இலட்சம் மக்களுக்கு மேல் இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டள்ளனர் எனவும் இவ்வாறு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைத்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Sixth Day Of Mullivaikal Commemoration

மேலும்,பசுமை இயக்கத்தின் கஞ்சி பரிமாறுதலின்போது தென்னம்பிள்ளைகளும் வழங்கி வைக்கப்படடன.

செய்தி - தீபன், கஜிந்தன்

சுப்பர் மடம்

முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து இன்று பிற்பகல் 4:00. மணியளவில் சுப்பர் மடம் மக்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Sixth Day Of Mullivaikal Commemoration

இதில் பிரதேசத்திற்கு உட்பட்ட இளைஞர்கள், யுவதிகள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கஞ்சியை பருகியுள்ளனர்.

செய்தி - எரிமலை

யாழ். கொக்குவில்

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை தலைமுறைகளிற்கு கடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது கொக்குவில் இந்துக் கல்லூரியை அண்மித்த பகுதிகளில் இன்றைதினம் (17.05.2024) இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Sixth Day Of Mullivaikal Commemoration

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் புதிதாக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீட மாணவர்களினால் குறித்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Sixth Day Of Mullivaikal Commemoration

2009 ஆம் ஆண்டு சிறிலங்கா ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரின் போது தமிழ் மக்களின் உயிர் காத்த உணவான முள்ளிவாய்க்கால்க் கஞ்சி தமிழர் தாயகமெங்கும் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் பல்வேறுபட்ட தரப்பினராலும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கிளிநொச்சி 

அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (17) கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிகுளம் இளைஞர்கள், முச்சக்கரவண்டி சங்கத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் அவலத்தினை நினைவு கூறும் வகையில் உப்புக்கஞ்சி வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வில், பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு உப்பு கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

செய்தி : காண்டீபன் 

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்

தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை : யாழ். பல்கலை சமூகம்

தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை : யாழ். பல்கலை சமூகம்

முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, தவசிகுளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் பலர் இணைந்து குறித்த கஞ்சி தவசிகுளம் பிரதான வீதியில் வைத்து இன்று (17.05) வழங்கி வைக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர்.

அதன் 15 ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்தும், அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது. வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Sixth Day Of Mullivaikal Commemoration

செய்தி - திலீபன்

தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் இடம்பெற்றன. 

இதன்போது, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Sixth Day Of Mullivaikal Commemoration

செய்தி : காண்டீபன் 
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US