கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் மற்றும் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வரி செலுத்தப்படாத 03 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 39 ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகள் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 06 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து வந்தவர்கள்
டுபாயில் இருந்து இன்று அதிகாலை வந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45, 48, 50 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், பெண் சந்தேக நபர்கள் 40 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அக்குறணை – நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண் News Lankasri

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அரங்கத்தையே பிரம்மிக்க வைத்த ஆராதனா! Manithan
