கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் மற்றும் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வரி செலுத்தப்படாத 03 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 39 ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகள் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 06 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து வந்தவர்கள்

டுபாயில் இருந்து இன்று அதிகாலை வந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45, 48, 50 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், பெண் சந்தேக நபர்கள் 40 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அக்குறணை – நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri