செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் சிவராத்திரி விழா
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் 3ஆம் நாள் சிவராத்திரி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த சிவராத்திரி நிகழ்வானது, நேற்றையதினம் (04.03.2024) நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கியுள்ளார்.
சிவராத்திரி தினம்
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் கடந்த முதலாம் திகதி முதல் தினமும் மாலை வேளையில் சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருவதோடு எதிர்வரும் 08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 8 மணி நேரம் முன்

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
