வவுனியாவில் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகரின் 167 ஆவது பிறந்த தினம் அனுஸ்டிப்பு
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 167 ஆவது பிறந்த தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டிலும் மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலைமையிலும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிகழ்வில் பேடன் பவல் பிரபுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதோடு தொடர்ந்து சாரணர் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இரத்ததான நிகழ்வு
அத்துடன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் குருதி வங்கியில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இதில், சாரணர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆணையாளரும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஓய்வுநிலை அதிபருமான ம.ச.பத்மநாதன், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், வவுனியா வடக்கு பிரதி கல்விப் பணிப்பாளருமான ம.ஜெயரூபன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




2025ம் ஆண்டில் காத்திருக்கும் பேரழிவு... கொரோனா தொற்று! மிரள வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு Manithan
