எங்கள் கட்சிக்கு ஆயுதங்களை வழங்கியது ஜே.வி.பி தான் - பிள்ளையான் பதிலடி
எங்கள் கட்சிக்கு ஆரம்பத்தில் ஆயுதங்களை வழங்கியது ஜே.வி.பி கட்சி தான் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (28.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayakke) வெளியிட்டுள்ள கருத்துக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மட்டக்களப்பு மக்களை நான் அச்சுறுத்துவதாக அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். இந்த மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்றது நான் தான். ஜனநாயகத்தைப் பற்றி பேசுபவர்கள் பொறுப்பாக யோசித்து பேச வேண்டும்.
நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டியது ஜே.வி.பி கட்சி. நாட்டை அழித்த ஒரு கட்சி, எமது மண்ணில் இவ்வாறு பேசுவது வேதனைக்குரிய விடயம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
மேலதிக தகவல் - சரவணன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam