எங்கள் கட்சிக்கு ஆயுதங்களை வழங்கியது ஜே.வி.பி தான் - பிள்ளையான் பதிலடி
எங்கள் கட்சிக்கு ஆரம்பத்தில் ஆயுதங்களை வழங்கியது ஜே.வி.பி கட்சி தான் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (28.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayakke) வெளியிட்டுள்ள கருத்துக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மட்டக்களப்பு மக்களை நான் அச்சுறுத்துவதாக அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். இந்த மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்றது நான் தான். ஜனநாயகத்தைப் பற்றி பேசுபவர்கள் பொறுப்பாக யோசித்து பேச வேண்டும்.
நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டியது ஜே.வி.பி கட்சி. நாட்டை அழித்த ஒரு கட்சி, எமது மண்ணில் இவ்வாறு பேசுவது வேதனைக்குரிய விடயம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
மேலதிக தகவல் - சரவணன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
