பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வி.எஸ் சிவகரனுக்கு அழைப்பு
கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திலிருந்து நான்கு மணி நேரம் விசாரணைக்காக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த திங்கட்கிழமை (15) காலை 9 மணியளவில் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவிற்கு விசாரணைக்காக சென்றதாகவும் நான்கு மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் அழைப்பு விசாரணை
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன்.
ஊடகத்தின் அடிப்படை ஆதாரமில்லாத, அர்த்தமில்லாத, முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயங்களை உள்ளடக்கி வெறும் கற்பனையில் விசாரணை நடைபெற்றது.
சமூக பணி தொடரும்
சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் எமது
செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் முற்றிலும் அரசியல்
மயப்படுத்தப்பட்ட விசாரணை நடைபெற்றது.
இவ்வாறான தொடர் விசாரணைகளை கண்டு அச்சமடையத் போவதில்லை மேலும் எமது சமூக பணி தொடரும்” என தெரிவித்துள்ளார்.
வி.எஸ்.சிவகரனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு! |