புத்தாண்டு கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாத கிளிநொச்சி மக்கள்!
கிளிநொச்சியில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதிலோ அல்லது புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதிலோ மக்கள் ஆர்வம் காட்டவில்லை என நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள தமிழ்ப் புத்தாண்டு மலர உள்ள நிலையில், குறித்த சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறன.
குறிப்பாகப் பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை என பல்வேறு காரணங்களால் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் கடந்த காலங்கள் போல் புத்தாண்டு வியாபாரம் களைகட்டவில்லை என்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பு
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு
முகம் கொடுத்து வருவதாகவும் குறிப்பாக அதிகரித்த வரிசுமை மற்றும் மின்சார
கட்டண அதிகரிப்பு பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றின் காரணமாகக் கூடுதலான
முதலீடுகளைச் செய்து ஆடைகளைக் கொள்வனவு செய்தாலும் அவற்றை விற்பனை செய்வது மிகக்
கடினமாகவே இருப்பதாகவும் கடந்த காலங்களைப் போல் எதிர்பார்த்த எந்த வியாபாரமும்
இம்முறை நடைபெறவில்லை என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
