புத்தாண்டு கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாத கிளிநொச்சி மக்கள்!
கிளிநொச்சியில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதிலோ அல்லது புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதிலோ மக்கள் ஆர்வம் காட்டவில்லை என நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள தமிழ்ப் புத்தாண்டு மலர உள்ள நிலையில், குறித்த சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறன.
குறிப்பாகப் பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை என பல்வேறு காரணங்களால் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் கடந்த காலங்கள் போல் புத்தாண்டு வியாபாரம் களைகட்டவில்லை என்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பு
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு
முகம் கொடுத்து வருவதாகவும் குறிப்பாக அதிகரித்த வரிசுமை மற்றும் மின்சார
கட்டண அதிகரிப்பு பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றின் காரணமாகக் கூடுதலான
முதலீடுகளைச் செய்து ஆடைகளைக் கொள்வனவு செய்தாலும் அவற்றை விற்பனை செய்வது மிகக்
கடினமாகவே இருப்பதாகவும் கடந்த காலங்களைப் போல் எதிர்பார்த்த எந்த வியாபாரமும்
இம்முறை நடைபெறவில்லை என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 21 நிமிடங்கள் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri