சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களைகட்டியுள்ள வியாபார நடவடிக்கைகள்
கோவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.
தமிழ் - சிங்கள புதுவருடம் நாளை மறு தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி புத்தாடைகள், இனிப்பு பொருட்கள், வெடிகள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் வவுனியா நகரம் சன நெரிசல் மிக்கதாக காணப்படும் நிலையில், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.