தமிழர் பகுதியில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்
பழைய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் என்பதை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(22.02.2026) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தை சிவில் அமைப்புக்களின் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து போராட்டம்
குறித்த கையெழுத்து போராட்டம், கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கையெழுத்து போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்துகொண்டுள்ளார்.


அம்பாறையில் கையெழுத்து போராட்டம்
நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டு வரப்பட பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம், இன்று(22.02.2026) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

கையெழுத்து போராட்டம்
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் துரையப்பா காந்தன்,ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர்,தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இரண்டு சட்டங்களும் எமக்கு தேவையில்லை என்று பல பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்து இடுவதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்- சிஹான் பாரூக்
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam