ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப பரவி வரும் இணையவழி மோசடி மையங்கள் (Cyber-enabled fraud compounds), மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது.
கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மையங்கள் ஒரு "தன்னிறைவு பெற்ற நகரங்கள்" போலச் செயல்படுவதாகவும், அங்கு சுமார் 3 இலட்சம் பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விளம்பரங்கள்
குறிப்பாக மேகாங் (Mekong) பிராந்தியத்தில் மட்டும் இந்த மோசடித் தொழில் ஆண்டுக்கு சுமார் $43.8 பில்லியன் டொலர் மதிப்பிலான வருவாயை ஈட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு பணிபுரியும் நபர்கள் பெரும்பாலும் அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, ஆள் கடத்தல் முறையில் உள்ளே கொண்டு வரப்படுகின்றனர்.
அங்கு அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, கம்பிவேலிகளால் சூழப்பட்ட வளாகங்களுக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
இலக்குகளை எட்டத் தவறுபவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், மின்சார அதிர்ச்சி, பாலியல் வன்கொடுமை மற்றும் பட்டினி போன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டப்பகலில் மாத்தறையை உறைய வைத்த துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்
குற்றவியல் மாநாட்டை
குறிப்பாக, சமூக ஊடகங்கள் மூலம் நபர்களைக் கண்டறியவும், போலி உரையாடல்களை உருவாக்கவும் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இந்தக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்துவது கவலையளிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்த மோசடி மையங்கள் அரசு அதிகாரிகளின் பின்னணியுடன் செயல்படுவதால், சட்ட அமுலாக்கத் துறையினரால் இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
தவிர்க்க மேற்கொள்ளப்படும் பல சோதனைகள் வெறும் "கண் துடைப்பு" நடவடிக்கைகளாகவே முடிந்துவிடுகின்றன.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் குற்றவியல் மாநாட்டை (UN Crime Congress) முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்குப் தீர்வு காண வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் அவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam