மன்னார் கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை (Photos)
புதிய கடற்றொழிலாளர் கொள்கை வரைவுக்கு எதிராக கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது இன்று(14.12.2023) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஏற்பாட்டில், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)
பொருளாதார நெருக்கடி
இவ்வாறு சேகரிக்கப்படும் கையெழுத்துகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கடந்த பல வருடங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக கடற்றொழில் சமூகத்தை பெரிதும் பாதிப்படைய வைத்திருந்தது.
இவ்வாறான துயர் மத்தியில் வாழும் கடற்றொழில் சமூகத்தை பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி கடற்றொழிலாளர் சமூகத்திற்கு முடிவு வழங்குமாறு கோரி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் சமூகத்தை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள கடற்றொழில் சட்டம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில் சமூகத்தை பாதிக்கும் வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்க முயற்சிக்கின்றது.
கடற்றொழில் சட்டம்
இவ்வாறு வர்த்தக மயப் படுத்தப்பட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக வரைவை சட்டத்துக்கான எதிர்ப்பினை ஒவ்வொரு இடங்களில் கடற்தொழிலாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கான ஒதுக்கீடுகள் மிக குறைவாக உள்ளது. மேலும் கடற்றொழில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடல் உணவு இறக்குமதி கொள்கைகள் முன்மொழியப் படுகின்றன. இந்த நிலையில் இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு தொழில் கப்பல்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதை முற்றும் முழுதாக எதிர்க்கின்றோம், கடல் உணவு இறக்குமதியால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் போதிய ஒதுக்கீடு இன்மையால் பொருத்தமற்ற அரச கொள்கைகளையும் மாற்றி அமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்கள் மூலம் கட்டி எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த பல வருடங்களாக இந்திய இழுவை படகுகளின் வருகையால் பாதிக்கப்பட்டு வரும் வட இலங்கை கடற்றொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
