மொனராகலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை(Video)
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து திரட்டும் நடவடிக்கை
இதற்கமைய நேற்று(01.10.2022) பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை மொனராகலை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரை
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின்
ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்து போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.