வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்: மனித உரிமை ஆணையகத்தை முற்றுகையிட்ட உறவுகள்
வெடுக்குநாறி ஆலயத்தில் வைத்து கைதான ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரில் 5 பேர் தொடர்ந்தும் உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், மனித உரிமை கண்காணிப்பகம் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா - மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
தமக்கான நீதியை வலியுறுத்தி ஆலய பூசகர் உள்ளிட்ட 5 பேர் இன்றும் 5வது நாளாக உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களது உடல்நிலை குறித்து இதுவரையில் எந்தவித செயற்பாடுகளையும் மனிதஉரிமை ஆணையகம் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |