கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை - மூவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் பாரியளவில் நடாத்திவரப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையமொன்று மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து பெருமளவான கசிப்பு மற்றும் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனையினை கண்டறியும் வகையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனடிப்படையில் களுவன்கேணியில் உள்ள காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இங்கு கசிப்பு காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 03இலட்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, 56000மில்லி லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களும்,கைது செய்யப்பட்டவர்களும் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.



அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
