நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தரப்பினர்களுக்கு இடையில் விசேட சந்திப்பு! (Photos)
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தரப்பினர்களுக்குள் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, கிளிநொச்சி தர்மபுரம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கான பொது அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மக்களின் பல்வேறு வகையான தேவைகளையும் கேட்டறியப்பட்டதோடு அவர்களின் குறைகளுக்கான தீர்வினை விரைவில் பெற்றுத்தர வேண்டுமென்றும் தெரிவித்திருந்தனர்.
இச் சந்திப்பின் போது மேலும் கலந்துரையாடப்பட்டதாவது,
தருமபுரம் வைத்தியசாலை தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்டு பல வசதிகளும் இருப்பினும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் பொழுது அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கே மேலதிக சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையை மாற்றி தமது வைத்தியசாலைக்கு போதுமான வசதி வாய்புக்களை பெற்றுத் தருவதுடன், தமக்கான வைத்திய சேவையினை தமது பகுதியிலேயே பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையை நம்பி 14ற்கு மேற்பட்ட கிராமக்கள் இப்பகுதியில் இருப்பதாகவும் இவர்களுக்கான வைத்திய சேவையினை குறித்த வைத்தியசாலை மூலமாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமது பகுதியில் 1990 ஆம் ஆண்டு விமான தாக்குதலின் போது நீர்த்தாங்கி ஒன்று முற்றாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனையும் புனரமைத்து மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த சந்திப்பில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.