நிறைவேற்று அதிகாரத்தை உடன் ரத்து செய்ய வேண்டும் - மங்கள சமரவீர
நிறைவேற்று அதிகாரத்தை உடன் ரத்து செய்ய வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் டுவிட் பதிவொன்றின் மூலம் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
1978ம் ஆண்டு இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிறுவப்பட்டது முதல், நாட்டில் இடம்பெறும் அனைத்து கேடுகளினதும் ஊற்றாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட நவீன ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென மங்கள சமரவீர தனது டுவிட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.