குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு
துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நான்கரை நாள் வேலை வாரத்தை பின்பற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புத்தாண்டிலிருந்து புதிய விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளாக இருக்கும்.
அதேநேரம் வெள்ளிக்கிழமை அரை நாளாக இருக்கும் என்று அமீரக அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிவித்தலின்படி புதிய அதிகாரப்பூர்வ வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 முதல் மாலை 3.30 மணி வரையிலுமாக இருக்கும்.
அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணி வரையில் அதிகாரப்பூர்வ வேலை நேரமாக அமையும்.
உலகளாவிய வணிக தொடர்புகளுக்கு அமைய, ஐந்து நாள் வாரத்தை விட குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக அமீரகம் அமைகிறது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam