இலங்கையில் வாகன டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
நாட்டில் வாகன டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.
எதிர்வரும் மே மாதமளவில் நாட்டில் அமெரிக்க டொலர்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகும் என டயர் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில வர்த்தகர்கள் டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக போலியான தட்டுப்பாட்டை தற்போதே உருவாக்கி வருவதாக ஆசிய டயர் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் இலங்கைக்குள் சுமார் 31 இலட்சம் டயர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் பதினெட்டரை இலட்சம் டயர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
எஞ்சிய சுமார் 41 வீதமான டயர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டினால் வாகனங்களுக்கான டயர்களை இறக்குமதி செய்து கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan