இலங்கை மக்களுக்கு விரைவில் ஏற்படப் போகும் பாரிய நெருக்கடி நிலை
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறையால் குறித்த இக்கட்டான நிலை ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.
துறைமுகத்தில், 500 அரிசி கொள்கலன்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் டொலர் நெருக்கடியின் காரமணாக சிக்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்கலன்களில் சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருக்கின்றன.
இந்த கொள்கலன்களை, விடுவிக்க முடியாமல் போனால் சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri