இலங்கைக்கு வெளிநாட்டு வைத்தியர்களை அழைக்கும் நிலை ஏற்படலாம்
நாட்டில் தொடர்ந்து வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்படுமானால் மாற்றுவழி ஒன்று நடைமுறையாகும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி வைத்தியர்கள் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டிலுள்ள வைத்தியர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப் பணமும் தற்போது நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையுமே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பிரதான காரணமாக உள்ளது.

வைத்தியர்களின் எண்ணிக்கை
இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலைகளில் நடைபெறும் சிகிச்சை முறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில், இருவர் இருந்த இடத்தில் ஒருவரையும் அல்லது மூவர் இருந்த இடத்தில் இருவரையும் பணிக்கமர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri