கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் பற்றாக்குறை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக எண்பு முறிவு மற்றும் கண் சிகிச்சை பிரிவுகளுக்குரிய வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மல்லாவி மற்றும் விசுவமடு உடையார்கட்டு ஆகிய பிரதேச மக்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் சிசிச்சை வழங்கும் பிரதான வைத்தியசாலையாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
இந்நிலையில் பொது வைத்தியசாலையின் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு கண் சிகிச்சை பிரிவு என்பவற்றுக்கான வைத்திய நிபுணர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இல்லாத நிலை காணப்படுகின்றது.
மருந்து நிபுணர்
அத்துடன் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மாத்திரமே கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏ-09 பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வைத்திய சாலையில் விபத்துக்களில் காயமடையும் அதிகளவானவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இவ்வாறு வைத்திய நிபுணர்கள் இன்மை மயக்க மருந்து நிபுணர் பற்றாக்குறை என்பன நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த விடயத்தில் மாகாண சுகாதார அமைச்சுமற்றும் மத்திய சுகாதார அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam