கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் பற்றாக்குறை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக எண்பு முறிவு மற்றும் கண் சிகிச்சை பிரிவுகளுக்குரிய வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மல்லாவி மற்றும் விசுவமடு உடையார்கட்டு ஆகிய பிரதேச மக்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் சிசிச்சை வழங்கும் பிரதான வைத்தியசாலையாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
இந்நிலையில் பொது வைத்தியசாலையின் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு கண் சிகிச்சை பிரிவு என்பவற்றுக்கான வைத்திய நிபுணர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இல்லாத நிலை காணப்படுகின்றது.
மருந்து நிபுணர்
அத்துடன் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மாத்திரமே கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏ-09 பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வைத்திய சாலையில் விபத்துக்களில் காயமடையும் அதிகளவானவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இவ்வாறு வைத்திய நிபுணர்கள் இன்மை மயக்க மருந்து நிபுணர் பற்றாக்குறை என்பன நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த விடயத்தில் மாகாண சுகாதார அமைச்சுமற்றும் மத்திய சுகாதார அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 22 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan