கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் பற்றாக்குறை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக எண்பு முறிவு மற்றும் கண் சிகிச்சை பிரிவுகளுக்குரிய வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மல்லாவி மற்றும் விசுவமடு உடையார்கட்டு ஆகிய பிரதேச மக்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் சிசிச்சை வழங்கும் பிரதான வைத்தியசாலையாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
இந்நிலையில் பொது வைத்தியசாலையின் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு கண் சிகிச்சை பிரிவு என்பவற்றுக்கான வைத்திய நிபுணர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இல்லாத நிலை காணப்படுகின்றது.
மருந்து நிபுணர்
அத்துடன் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மாத்திரமே கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏ-09 பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வைத்திய சாலையில் விபத்துக்களில் காயமடையும் அதிகளவானவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இவ்வாறு வைத்திய நிபுணர்கள் இன்மை மயக்க மருந்து நிபுணர் பற்றாக்குறை என்பன நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த விடயத்தில் மாகாண சுகாதார அமைச்சுமற்றும் மத்திய சுகாதார அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam