கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் பற்றாக்குறை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக எண்பு முறிவு மற்றும் கண் சிகிச்சை பிரிவுகளுக்குரிய வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மல்லாவி மற்றும் விசுவமடு உடையார்கட்டு ஆகிய பிரதேச மக்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் சிசிச்சை வழங்கும் பிரதான வைத்தியசாலையாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
இந்நிலையில் பொது வைத்தியசாலையின் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு கண் சிகிச்சை பிரிவு என்பவற்றுக்கான வைத்திய நிபுணர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இல்லாத நிலை காணப்படுகின்றது.
மருந்து நிபுணர்
அத்துடன் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மாத்திரமே கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏ-09 பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வைத்திய சாலையில் விபத்துக்களில் காயமடையும் அதிகளவானவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இவ்வாறு வைத்திய நிபுணர்கள் இன்மை மயக்க மருந்து நிபுணர் பற்றாக்குறை என்பன நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த விடயத்தில் மாகாண சுகாதார அமைச்சுமற்றும் மத்திய சுகாதார அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
