இலங்கையில் 92 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு - சபையில் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர்
இலங்கையில் 383 அத்தியாவசிய மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கமைய,14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த 14 முக்கிய மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் கையிருப்பில் இல்லை என்றும், அவை ஆங்காங்கே கிடைக்கின்றன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு கட்டுப்பாட்டை மீறவில்லை என்றும், அத்தகைய மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க முடியும் என்றும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மருந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன எழுப்பிய மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிறுவர்கள் மத்தியில் போசாக்கு குறைபாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்கள் நாட்டில் நிலவும் நிலைமையை பெரிதாக்குவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
குருதி உறைதலுக்கு பயன்படுத்தப்படும் ஹெபரின் ஊசி தற்போது கையிருப்பில் இல்லை
என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு பதிலளித்த
அமைச்சர் ரம்புக்வெல்ல, தேவைப்பட்டால் குப்பிகளை விமானத்தில் கொண்டு செல்ல
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்.. உங்கள் ராசி இருக்கா? News Lankasri
