சற்றுமுன்னர் பானதுர நிலங்கவின் உறவினர் சுட்டுப் படுகொலை.. குடு சலிந்து குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்!
புதிய இணைப்பு
பயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முக்கிய சந்தேக நபரான பானதுர நிலங்கவின் மைத்துனர் திலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்ஷிதா என்ற "குடு சலிந்து" என்பவரின் குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
களுத்துறை அருகே சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலை அனுமதி
களுத்துறை மாவட்டத்தின் பயாகல அருகே கொஸ்ஹேன பிரதேசத்தில் குறித்த சம்பவம் இன்றிரவு பத்து மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.